2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தற்போது நிலவும் மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துதல் - தற்போது நிலவும் வறட்சி மிக்க காலநிலை காரணமாக நாட்டில் மின்சார கேள்வியினை வழங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை பிறப்பிப்பது சவாலாக அமைந்துள்ளது. மின்சார பிறப்பாக்கமானது பழைய நிலைக்கு வரும்வரை மிகச் சிக்கனமாக மின்சார நுகர்வினை செய்வதன் மூலம் கணிசமான அளவு மின்சாரத்தினை சேமித்துக் கொள்வதற்கான ஆற்றலை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வீட்டு மற்றும் வர்த்தக ரீதியில் மின்சார நுகர்வின்போது சிக்கமான மின்சாரத்தை பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் உட்பட நிறுவனங்களுக்கு அறியச் செய்விப்பதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் மூன்றுமாத (03) காலப்பகுதிக்கு அனைத்து வீடுகளிலும் இரண்டு மின்குமிழ்களை அணைத்துவைத்தல், அரசாங்க நிறுவனங்கள், மத மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சார பாவனையை 10 சதவீதத்தினால் குறைத்தல் தேவையற்ற வீதி மின் விளக்குகளை அணைத்தல், வழமையான நாடுகளில் விதி விளக்குகளை அணைக்கும் நேரத்தை விட ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னர், சகல மின் விளக்குகளையும் அணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |