2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மின்சார கைத்தொழில் தொடர்பான பொதுக் கொள்கை வழிகாட்டல்க - 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 5 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, மின்சார கைத்தொழில் சம்பந்தமான பொதுக் கொள்கையானது அமைச்சரினால் வௌியிடப்படுதல் வேண்டும். இதற்கிணங்க நடைமுறையிலுள்ளதும் 2009 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டதுமான வழிகாட்டல்களை இரத்துச் செய்து, வலுசக்தித் துறையில் உருவாகிவரும் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் எரிபொருள் பல்வகைமை, பாதுகாப்பு, மின்சார அறிவிடல்முறை, மின் பிறப்பாக்கம், அனுப்பீடு, விநியோக முறைமை, மின்சார கருத்திட்டங்களுக்கான நிதியிடல், வலுசக்தி பாதுகாப்பு, நுகர்வோர் சேவைகள், பல்துறை அபிவிருத்தி, பாதுகாப்பு, மற்றும் உரிமமப்பத்திரங்களை பெறுவதிலிருந்து விலக்களித்தல் போன்ற துறைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டல்களை வௌியிடும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |