• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தீங்கு விளைவிக்கும் மற்றும் அபாயகரமான நுண்ணுயிர்கள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு தேவையான நோய் நிர்ணய வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடமொன்றைத் தாபித்தல்
- பல்வேறுபட்ட துறைகளைத் தழுவும் விதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் மற்றும் நோய்களை நிர்ணயித்தல் சுமார் 116 வருட வரலாற்றைக் கொண்ட மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் சேவைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தி தீங்கு விளைவிக்கும் மற்றும் அபாயகரமான நுண்ணுயிர்களை இனங்காண்பதற்கும் அது தொடர்பில் பாதுகாப்பாக செயலாற்றுவதற்கும் தேவையான உயர்மட்ட வசதிகளை விருத்தி செய்யும் நோக்கில் 3 ஆவது மட்ட உயிரியல் பாதுகாப்பு ஆய்வுகூடமொன்றைத் 125 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் தாபிப்பதற்கு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.