• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிசர சுவாச நோய்கள் தொடர்பான தேசிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தல்
- 1946 ஆம் ஆண்டில் சேவையினை ஆரம்பித்த வெலிசர சுவாச நோய்கள் தொடர்பான தேசிய வைத்திய சாலையானது இலங்கையில் சுவாச நோய்களை நிர்ணயித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பன சார்பில் ஒதுக்கப்பட்ட ஒரே வைத்தியசாலையாக இயங்குகின்றது. வருடாந்தம் ஒரு இலட்சம் வௌி நோயாளர்களுக்கு சேவை வழங்கும் இந்த வைத்தியசாலை வருடாந்தம் 1000 இற்கு மேற்பட்ட மார்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றது. சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் நிகழ்கால மற்றும் எதிர்கால கேள்வியினை பூர்த்தி செய்து இந்த வைத்தியசாலையின் சுகாதார சிகிச்சை வசதிகளை விருத்தி செய்வதற்கு 9,180 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டுடன் அபிவிருத்தி கருத்திட்டமொன்றை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.