• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
200 கிராமிய பாலங்களை நிர்மாணிப்பதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
- நாட்டின் பிரதான அபிவிருத்தி செயற்பாட்டின் முழுமையான நன்மையினை கஷ்ட பிரதேச கிராமங்களுக்கும் வழங்கும் நோக்குடன் நாட்டில் போக்குவரத்து இணைப்புகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. கஷ்டப் பிரதேசத்தை வளர்ச்சி கண்ட பிரதேசங்களுடன் இணைக்கும் நோக்குடன் கிராமிய பால நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட கிராமிய பாலங்களிலிருந்து 200 பாலங்களை நெதர்லாந்து சலுகை நிதியுதவியின் கீழ் நிருமாணிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. 14 மில்லியன் யூரோ சலுகை கடன் தொகையின் கீழ் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நெதர்லாந்தின் Cooperative Rabobank U.A நிறுவனத்துடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.