2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தை இலங்கையில் நடாத்துதல் - 'அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சமூக பாதுகாப்பு மற்றும் அதிகரித்துவரும் வயது மூப்படையும் சனத்தொகைக்கான தொழில்வாய்ப்பு பற்றிய சவால்கள்' எனும் தொனிப்பொருளின் கீழ் ஆசிய - ஐரோப்பிய அரசியல் மன்றத்தின் மூன்றாவது கூட்டத்தை 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 - 08 ஆம் திகதி வரை, கொழும்பில் நடாத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கும் அதனுடன் தொடர்புபட்ட அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினாலும் ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |