2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குதல் - காரணம் கண்டறியப்படாத சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 298 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை பயன்படுத்தி லுனுகம்வெஹெர, கிரிந்திஓயா நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தரமுயர்த்தும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரமுயர்த்தப் படும் கிரிந்திஓயா நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் திஸ்ஸமகாராம பிரதேச செயலக பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாண்புமிகு நரேந்திர மோடி மாதிரி கிராமத்திலுள்ள 217 வீட்டு அலகுகளுக்கு நீர் வழங்குவதற்குத் தேவையான குழாய்களை பதிக்கும் கருத்திட்டத்தை தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகள் மூலம் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |