• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத் தொகுதிக்கு மேலும் செய்யப்படவேண்டிய நவீனமயப்படுத்தல்
- நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் ஏழு மாடி கட்டடத்தொகுதியை மீள் கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தை 500 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டின் கீழ் அரசாங்க அபிவிருத்தி, நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உரிய நவீனமயப்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, கட்டட தொகுதிக்கு செய்யப்படவேண்டிய மேலும் அத்தியாவசிய வேலைகள் சில வைத்தியசாலை அதிகாரபீடத்தினால் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக அறுவைசிகிச்சை கூட்டத்திற்கு செய்யப்படவேண்டிய விருத்தி பணிகள், கழிவு நீர் வடிகாலமைப்பு முறைமைகளை அமைத்தல் போன்ற இனங்காணப்பட்ட அத்தியாவசிய பணிகளையும் செய்துகொள்வதற்கு இயலுமாகும் வகையில் 500 மில்லியன் ரூபாவான இந்தக் கருத்திட்டத்தின் மொத்த செலவு மதிப்பீட்டினை 692.43 மில்லியன் ரூபாவாக திருத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.