• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
7,500 பயிலுநர் கருத்திட்ட உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
- அபிவிருத்தி கருத்திட்டங்களின் உன்னிப்பான மேற்பார்வையும் ஒருங்கிணைப்பும் கூறப்பட்ட கருத்திட்டங்களினை பயனுறுதி வாய்ந்த விதத்தில் அமுலாக்குவதற்கான அத்தியாவசிய காரணிகளாகவுள்ளன. க.பொ.த (உ.த) வரை கற்றுள்ள தொழிலற்ற இளையோர்களை தேசிய அபிவிருத்தி செய்முறையில் அவர்களை உள்வாங்கச் செய்வதன் மூலம் அச்செய்முறையில் பங்காளர்களாக ஆக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ் வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7,500 பயிலுநர் கருத்திட்ட உதவியாளர் களை ஆட்சேர்ப்பு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், அவ்வாறு தெரிவு செய்யப்படும் பரீட்சார்த்திகளை ஒப்பந்த அடிப்படையில் ஒரு (01) வருட காலத்திற்கு, பயிலுநர் கருத்திட்ட உதவியாளர் பதவிகளுக்கு நியமிப்பதற்கும் தலா 15,000/- மாதாந்த படியினை அவர்களுக்கு செலுத்துவதற்கும் பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.