2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் அமைதிகாக்கும் பணி நடவடிக்கைகளுக்கான பயிற்சி நிறுவகத்தில் வசதிகளை மேம்படுத்துதல் - குக்குலேகங்க நீர் மின் சக்தி கருத்திட்டத்தின் அலுவலக கட்டடத் தொகுதியில் இயங்கும் பயிற்சி நிலையமானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழுள்ள அமைதிகாக்கும் பணிகளுக்கு செல்லும் இராணுவ படையணிக்குத் தேவையான பயிற்சியினை வழங்குகின்றது. அதற்கிணங்க, கூறப்பட்ட பயிற்சி அமர்வுகளை கூடுதல் தரத்துடனும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நியமங்களுக்கும் ஏற்ப நடாத்தும் பொருட்டு 811.71 மில்லியன் ரூபா முதலீட்டில் இப்பயிற்சி நிறுவகத்தின் வசதிகளை தரமுயர்த்தும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |