2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொத்தணி குண்டு சம்பந்தமான சர்வதேச சமவாயத்தை (ஒஸ்லோ சமவாயம்) இலங்கையில் உள்நாட்டுச் சட்டமாக சட்டமுறைப்படுத்தல் - பாரிய அழிவை விளைவிக்கும் பன்முக வெடிப்பு துணைக் குண்டுகளில் இணைக்கப்பட்ட கொத்தணி குண்டுகளை இல்லாதொழித்தல் தொடர்பான சமவாயத்திற்கு உடன்படுவதன் மூலம் மனிதநேய ரீதியிலான படைவலு குறைப்பிற்காக நிலைநிற்கும் ஓர் அரசாக இலங்கையினால் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருக்கும். இப்பிராந்தியத்தினதும் அதேபோல் இவ்வுலகிலும் சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்காக செய்யப்படவுள்ள பங்களிப்பை கவனத்திற்கு கொண்டு, கொத்தணி குண்டு சம்பந்தமான சர்வதேச சமவாயத்தை அல்லது ஒஸ்லோ சமவாயத்தை இலங்கையில் உள்நாட்டுச் சட்டமாக சட்டமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆதலால், இந்த நோக்கம் கருதி தேவையான சட்டத்தினை வரையும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |