2019-03-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'போதைப்பொருள் பாவனையற்ற நாடு' - தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் - போதைப்பொருளுக்கு அடிமையாகிய ஆட்களின் புனர்வாழ்வு கருதியும் போதைப்பொருள் பாவனையற்ற நாடொன்றினை உருவாக்குவது தொடர்பிலான செயற்பாடுகளை மேலும் விரிவாக்கும் பொருட்டு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்களை இனங்காண்பதற்கான நவீன உபகரணங்களை இறக்குமதி செய்து பாவித்தல் கருதியும் தேசிய அதிகாரசபை ஒன்றினை தாபிப்பதற்கு அமைச்சரவையானது அதன் அங்கீகாரத்தை ஏற்கனவே வழங்கியிருந்தது. அதற்கிணங்க அத்தகைய அதிகாரசபையானது தாபிக்கப்படும் வரை கூறப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாக அமுல்படுத்துவதற்காக மதியுரைக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |