• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியம்
- பல்வேறுபட்ட சமூக பிரச்சினைகள் காரணமாக துயருறும் சிறுவர்கள் பிறப்பில் மற்றும் அதன் பின்னர் பல்வேறுபட்ட விபத்துக்கள் உட்பட நோய்கள் காரணமாக துயருறும் சிறுவர்கள், பெற்றோர்களின் கவனமின்மை மற்றும் பூரண அறிவின்மை என்பன காரணமாக துயரும் சிறுவர்கள் சார்பில் தேவையான ஒத்தாசைகளை வழங்குவதற்கு ஆட்கள் மற்றும் அமைப்புகள் தன்னார்வ அடிப்படையில் வழங்குவதற்கு5 முன்வருவதோடு, அவர்களுடைய நன்கொடைகள் சார்பில் பொறுப்புக்கூறும் சட்டரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிறுவன கட்டமைப்பொன்று இருப்பது காலத்தின் தேவையாகும். ஆதலால், சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் 'சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை' தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.