• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்வதற்காக பாரந்தூக்கிகள் மூன்றினை கொள்வனவு செய்தல்
- கொழும்பு துறைமுகத்திற்கு வரும் பாரிய கொள்கலன் கப்பல்களை கையாளும் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு இலங்கை துறைமுக அதிகாரசபையினால் ஜய கொள்கலன் முனைவிடத்தின் ஆழமான நங்கூரமிடல் பிரதேசத்தின் கொள்ளளவை விருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் ஆக்கக்கூறு ஒன்றான கப்பலிலிருந்து கரைக்கு கொள்கலன் கையாள்கை செய்வதற்காக பாரம் தூக்கிகள் மூன்றினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசின் பிரகாரம் Shanghai Zhenhua Heavy Industries Co. Ltd நிறுவனத்திற்கு கையளிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தின் மீது மூன்று பாரம்தூக்கிகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை செயற்பாடுகளின் தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.