• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அநுராதபுரம், வவுணதீவு, மாகோ, பன்னல, வாழைச்சேனை பிரதேசங்களில் 28 சூரிய சக்தி கரு்ததிட்டங்களை அபிவிருத்தி செய்தல்
- 2030 ஆம் ஆண்டளவில் மின்சாரத்துறையில் சுமார் 60 சதவீதத்தினை புதுப்பிக்கத்க்க வலுசக்தியாக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள சூரியபல சங்கிராமய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அநுராதபுரம், வவுணதீவு, மாகோ, பன்னல, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 1MW கொள்ளளவினைக் கொண்ட 28 சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 28 முதலீட்டாளர்களிடமிருந்து கிலோவொட் மணித்தியாலமொன்று 12.84 ரூபாவுக்கும் 15.93 ரூபாவுக்கும் இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.