2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 10,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி - மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு மரணம் ஏற்படுவதிலிருந்து தடுப்பதற்கு வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் 40 மில்லி கிராம் Tenecteplase ஊசி மருந்து புட்டிகள் 10,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறும் 4,250,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு இந்தியாவின் Boehringer Ingelheim India (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |