• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகித்தபுரவர அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- நாட்டில் பல்வேறுபட்ட நகரங்களில் பொதுமக்களுக்கான வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுகித்தபுரவர அபிவிருத்தி கருத்திட்டமானது 2016 ஆம் ஆண்டிலிருந்து மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் கீழ் சுமார் 12,894 மில்லியன் ரூபா இது வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. சகல மாகாணங்களையும் தழுவும் விதத்தில் தொகை விற்பனை நிலையங்கள், வசுத் தரிப்பிடங்கள், பூங்காக்கள், வாகனத் தரிப்பிடங்கள், மெல்லோட்ட நடைபாதைகள், வாராந்த சந்தைகள், மீன் விற்பனை நிலையங்கள், நகர மண்டபங்கள், வர்த்தக கட்டடத் தொகுதிகள், நகர மத்திய நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், கரையோரப் பூங்காக்கள், வீதி அபிவிருத்தி பணிகள் போன்ற 2019 ஆம் ஆண்டிலே செயற்படுத்துவதற்கு கண்டறியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.