2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உயர்த்தும் சாதனங்கள் (ESCALATORS) மற்றும் மின் தூக்கிகள் (ELEVATORS) ஆகியவற்றுக்கு மின்னியல் தொடர்பான பாதுகாப்பு பற்றிய தகுதிச் சான்றிதழை வழங்குதல் - இலங்கையில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்த்தும் சாதனங்கள் (ESCALATORS) மற்றும் மின் தூக்கிகள் (ELEVATORS) மூலம் ஏற்படும் விபத்துக்களில் கணிசமான அளவு மின்சாரத் தடை காரணமாக நிகழுகின்றமை பற்றிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையைத் தவிர்க்கும் பொருட்டு உரிய தரப்பினர்களின் உடன்பாட்டுடன் இந்த இயந்திரங்கள் சம்பந்தமாக தகுதி சான்றிதழொன்றை வழங்கும் பொருட்டு பொருத்தமான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்து வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையில் பொருத்தப்பட்டுள்ள சகல உயர்த்தும் சாதனங்கள் (ESCALATORS) மற்றும் மின் தூக்கிகள் (ELEVATORS) ஆகியவற்றுக்கு மின்னியல் தொடர்பான பாதுகாப்பு பற்றிய தகுதிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் கட்டாயத் தேவைப்பாட்டின் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |