• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கான சட்டத் தடைகளை நீக்குதல்
- 2030 ஆம் ஆண்டளவில் மின்சக்தியின் சுமார் 60 சதவீதம் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைகள் ஊடாக பிறப்பித்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் புதிய மின் உற்பத்தி நிலையங்களின் அபிவிருத்தி சம்பந்தமாக இலங்கை மின்சாரசபை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபை என்பவற்றுக்கு இடையில் நிலவும் சட்ட மற்றும் கொள்கை ரீதியிலான மாற்றங்கள் காரணமாக இத்தகைய பிரதான மின்சக்தி அபிவிருத்தி கருத்திட்டங்களை மேற்கொள்ளும் போது சில பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 10மெகா வொட் அல்லது அதற்கு குறைவான கொள்ளவினைக் கொண்ட பாரம்பரியமற்ற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி தோற்றுவாய்களிலிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யும் போது நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய வழிமுறையொன்றை பின்பற்றக் கூடிய விதத்தில் 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டம் என்பவற்றை திருத்தும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.