2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க நிறுவன மனையிடங்களுக்குள் வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றை தடை செய்தல் - வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்கள் காரணமாக வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த பதவியணியினர் மற்றும் இந்த நிறுவனங்களை நாடிவரும் பொதுமக்களுக்கு அரசாங்க நிறுவன மனையிடங்களுக்குள் வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையை தடுப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதன் பொருட்டிலான ஏற்பாடுகளை செய்வதற்காக அரசாங்க நிருவாக சுற்றறிக்கை யொன்றை வௌியிடும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |