• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துதல்
- இலங்கையில் நடைமுறையிலுள்ள தொழில் சட்டங்களுக்கு அமைவாக இலங்கையில் சேவை புரியும் வௌிநாட்டு ஊழியர்கள் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தினால் நிருவகிக்கப்படுவதோடு, இந்த ஊழியர்கள் இலங்கையில் அவர்களுடைய சேவையினை முடித்துக் கொண்டு தமது சொந்த நாட்டிற்கு செல்கையில் அவர்கள் குறித்த காலப்பகுதிக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு செலுத்திய மொத்த பங்களிப்புத் தொகையையும் அதற்குரிய வட்டித் தொகையையும் மீளப் பெறுவதற்கு உரிமை பெறுகின்றனர். ஆயினும், இந்தியாவில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு அமைவாக அந் நாட்டில் இலங்கை ஊழியர் ஒருவர் அந் நாட்டு சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யவேண்டுமென்பதோடு, குறித்த ஊழியருக்கு பங்களிப்புத் தொகையினை 58 வயது வரை மீளப் பெற முடியாது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியாவில் சேவை புரியும் இலங்கையர்களுக்கு சலுகையளிக்கும் பொருட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமூகப் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு தொகையினை செலுத்தும் இலங்கை ஊழியர்கள் தொடர்ந்தும் இந்தியாவில் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு தொகையினை செலுத்த வேண்டியதில்லை. அதேபோன்று இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யாது இந்தியாவின் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிப்பு செய்யும் இந்தியாவில் சேவை புரியும் இலங்கையர்களுக்கு அவர்களுடைய பங்களிப்பு தொகையை இந்தியாவில் சேவைக் காலத்தை முடிக்கும் சந்தர்ப்பத்தில் மீளப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெறும். இதற்கமைவாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமூகப் பாதுகாப்பு உடன்படிக்கை யொன்றை செய்துகொள்வதற்கு இயலுமாகும் வகையில் 1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தை திருத்தும் பொருட்டு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.