2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி, பயிற்சியினை மேம்படுத்துதல் - வருடாந்தம் கிட்டத்தட்ட 60,000 இளைஞர்கள் போதுமான அளவு வாழ்க்கை தொழில் மற்றும் தொழினுட்ப திறன்கள் இன்றி தொழிலாளர்களாக நுழைவதுடன் அவர்கள் தொழிலின்றியோ அல்லது குறைந்த ஊதியம் செலுத்தப்படும் தொழில்களில் ஈடுபட்டோ வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. தொழினுட்ப மற்றும் வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி துறைகளுக்காக இளையோரை கவர்ந்திழுப்பதில் சிரமம் உள்ளமையும் உணரப்பட்டுள்ளது. ஆதலால் ஊழியச் சந்தையொன்றை உருவாக்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் ஆற்றல்களுடன்கூடிய இளையோரை கவர்ந்திழுக்கும் பொருட்டு துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவது அவசியமாகும். இது குறித்து, விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கிணங்க, இந் நோக்கம் கருதி நிதியங்களை குறித்தொதுக்கும் பொருட்டு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|