2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மீயுயர் நீதிமன்ற கட்டடத்தின் மத்திய வளிசீராக்கி முறைமைக்கு சில்லர் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்தல் - உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதித்துறை செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டடத்தின் வளிச் சீராக்கல் வசதிகளை முன்னேற்றும் நோக்குடன், மீயுயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள மத்திய வளிசீராக்கி முறைமைக்கு புதிய சில்லர் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்யும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|