2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் சார்பில் நிதிப் பெற்றுக் கொள்ளல் - சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் 2017 - 2023 காலப்பகுதிக்குள் 105 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் 57,500 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளின் வருமானத்தை நிரந்தரமாக அதிகரிப்பதற்கும் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 54.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் உதவியை வழங்குவதற்கு கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியம் உடன்பட்டுள்ளதோடு, இதிலிருந்து தற்போது 39.88 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் நடாத்திச் செல்வதற்குத் தேவையான 14.52 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மேலதிக நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |