2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காங்கேசன்துறை துறைமுகத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்காக காணியை உடைமையாக்குத -காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு உடன்படிக்கையொன்றுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இந்தக் கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை உடைமையாக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர்களைக் கொண்ட காணியினை உடைமையாக்கிக் கொள்வது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு குறித்த 15 ஏக்கர் காணியை உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |