• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய நேர்மைத்திறன் நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்தல்
- இலங்கை செயல்வலுப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்திற்கு அமைவாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு போதுமான சட்டப்பின்னணியையும் நிருவாக தகவுத்திறன்களையும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஊழலுக்கு எதிராக செயலாற்றுவதற்கு தேசிய ரீதியிலான செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நேர்மைத்திறன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வௌிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் பொறுப்புக் கூறல் உடனான நேர்மையான அரசாங்க சேவையொன்றை உருவாக்குதல், ஊழல் மற்றும் தடுப்பு வழிமுறைகள் பற்றி அரசாங்க ஊழியர்களுக்கு அறியச் செய்வித்தல், சாட்சிகள் மற்றும் தகவல்கள் வழங்குவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களையும் சமூகத்தையும் ஊக்குவித்தல், ஊழல்களை அம்பலப்படுத்துவதற்கு பிரசைகளை ஊக்குவித்தல் மற்றும் சாட்சிகளை, தகவல் வழங்குவோரை, எச்சரிக்கை விடுப்பவர்களை பாதுகாத்தல் அவர்கள் சார்பில் ஆஜராதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள தேசிய நேர்மைத்திறன் திட்டம், செயற்பாடுகள் என்பவற்றை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.