2019-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார திறமுறை : 2018 - 2025 - இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதார திறமுறை சர்வதேச ரீதியிலான மதியுரைஞர்களினதும் துறைசார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளினதும் பங்குபற்றுதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திறமுறையின் ஊடாக டிஜிட்டல் தொழினுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு பொருளாதாரத்தில் இனங்காணப்பட்ட முன்னுரிமை துறைகளான டிஜிட்டல்மயப்படுத்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் தேவையான டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புதல் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டதாகும். இந்த திறமுறையின் ஊடாக டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயங்கள் அத்துடன் சேவை வழங்கும் கிராமங்கள், மையப்படுத்தப்பட்ட கமத்தொழில் கட்டுப்பாட்டு நிலையம், சுற்றுலா தரவு பரிமாறல் நிலையம் போன்ற பிரதான மூன்று நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அதேபோன்று மூன்று வருட காலத்திற்குள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களும் அடங்கலாக பத்து முக்கிய கருத்திட்டங்களை பூர்த்திசெய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உத்தேச டிஜிட்டல் மயப்படுத்தல் திறமுறை சம்பந்தமாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழினுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரினால் செய்யப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |