2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடைசெய்தல் மற்றும் அவற்றை ஒழித்தல் சம்பந்தமாகவுள்ள சமவாயத்தை (ஒட்டாவா சமவாயம்) இலங்கையில் நடைமுறைப்படுத்துதல் - இலங்கையானது மனிதர்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்துதல், தொகைகளைப் பேணுதல், உற்பத்தி செய்தல் உட்பட ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதை தடைசெய்தல் மற்றும் அவற்றை ஒழித்தல் சம்பந்தமாகவுள்ள சமவாயத்தை (ஒட்டாவா சமவாயம்) இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்டுள்ளதோடு, இது 2018 யூன் மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சமவாயத்தின் 9 ஆம் பிரிவின் மூலம் ஆட்களினால் இந்த சமவாயத்தின் வரையறை அல்லது கட்டுப்பாட்டின் கீழ் ஏதேனும் தேச எல்லையொன்றில் மேற்கொள்ளப்படும் சமவாயத்தின் கீழ் அரச தரப்பொன்றுக்கு தடைசெய்யப்பட்டுள்ள அத்தகைய ஏதேனும் செயற்பாடொன்றைத் தடுத்தல் மற்றும் தடுப்பதற்கான தண்டனைகளை விதித்தல் அடங்கலாக சகல பொருத்தமான சட்ட, நிருவாக மற்றும் பிற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தரப்பொன்றாக இலங்கை கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூல மொன்றை தயாரிக்கும் பொருட்டு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அங்கீகாரத்திற்கு அமைவாக சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைவாக, உரிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது
|