2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மொறட்டுவை, உசாவியவத்த வீடுகளின் அபிவிருத்திப் பணிகள் - அரசாங்கத்திற்குச் சொந்தமான மொறட்டுவை, உசாவியவத்த காணியில் தற்போது 50 குடும்பங்கள் வசித்து வருவதோடு, இதில் 30 குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வசிக்கின்றனர். மீதி 20 குடும்பங்கள் 2010 இல் அரசாங்க சார்பற்ற அமைப்பொன்றினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர்மாடி வீட்டு கட்டடங்கள் இரண்டில் வசிக்கின்றனர். இந்த 50 குடும்பங்களும் பொது துப்பரவேற்பாட்டு வசதிகளை பயன்படுத்துவதோடு, அவையும் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. தற்போது தற்காலிக வீடுகளில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு இந்த காணியிலே 30 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் தொடர் மாடி வீடுகளில் வசிக்கும் 20 குடும்பங்களுக்குத் தேவையான துப்பரவேற்பாட்டு வசதிகளை குடியிருப்பாளர்களின் பங்களிப்புடன் விருத்தி செய்வதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |