2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தை பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் தாபிப்பதற்கு சட்டமூலமொன்றை வரைவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |