• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போதுள்ள விசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்களை திருத்துதல்
- இலங்கைக்கு 500,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை அனுப்பும் முதலீட்டாளர்களுக்கு 10 வருட காலம் இந்த நாட்டில் வசிப்பதற்காக விசா உரிமப்பத்திரங்களை வழங்குதல், இலங்கைக்கு 300,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை அனுப்பும் முதலீட்டாளரக்ளுக்கு 5 வருட காலம் இந்த நாட்டில் வசிப்பதற்காக விசா உரிமப்பத்திரங்களை வழங்குதல், மற்றும் வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டதன் காரணமாக இலங்கை குடியுரிமை இல்லாமல் போனவர்களுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் விதித்துரைக்கப்படும் காலப்பகுதி வரை நிரந்தரமாக வதிவதற்கு விசா உரிமப்பத்திரங்களை வழங்குதல் என்பன பொருட்டு 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் 14(1) ஆம் 14(2) ஆம் பிரிவுகளை திருத்துவதற்கும் 14(3அ) என்னும் புதிய பிரிவொன்றை சேர்ப்பதற்குமாக சட்டமூலமொன்று சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது