• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சூரியசக்தி மின் உற்பத்தி கருத்திட்டத்திற்காக இந்திய கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளல்
- சூரியசக்தி மின் உற்பத்தி அபிவிருத்தியின் பொருட்டு இலங்கையினால் வழங்கப்படும் முன்னுரிமைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினாலும் பிரான்ஸ் அரசாங்கத்தினாலும் ஒத்தாசை வழங்கப்படும் சர்வதேச சூரியசக்தி நட்புறவு மன்றத்திற்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படடுள்ளது. 2018 மார்ச் மாதத்தில் நடாத்தப்பட்ட இந்த மன்றத்தின் முதலாவது மாநாட்டின் போது இலங்கை உறுப்புரிமையை பெற்றுக் கொண்டதோடு சர்வதேச சூரியசக்தி நட்புறவு மன்றத்தின் கட்டமைக்கப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. இலங்கையினால் இந்த கட்டமைக்கப்பட்ட உடன்படிக்கையில் கைச்சாத் திட்டமையை குறிப்பிடும் வகையில் இலங்கையில் சூரிய மின் சக்தி உற்பத்தி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை விருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் வசதியினை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க சூரியசக்தி மின் உற்பத்தி அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியிடமிருந்து 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட கடன் வசதியொன்றை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.