• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்பித்திகம பொலிஸ் நிலைய நிர்மாணிப்பு
- பொல்பித்திகம பொலிஸ் நிலைய நிர்மாணிப்புக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, பல்வேறுபட்ட நடைமுறை காரணங்களினால் இந்த நிர்மாணிப்பு பணிகள் இதுவரை தாமதமடைந்துள்ளன. ஆதலால், இந்த நிர்மாணிப்பு பணிகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தின் ஆலோசனையின் கீழ் முறையாக மேற்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.