2019-02-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கெட்டவலமுல்லவில் அமைந்துள்ள இலங்கை பொலிஸ் வீடமைப்புக் கட்டடத்தொகுதியை விருத்தி செய்தல் - இலங்கை பொலிசின் சிரேட்ட உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதிகளை வழங்கும் உத்தியோகபூர்வ வீடமைப்பு கட்டடத் தொகுதிகள் இரண்டு கொழும்பு கெட்டவலமுல்ல பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ளதோடு, இவற்றுள் ஒரு வீடமைப்பு கட்டடத்தொகுதியானது மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் திருத்த வேலைகளை துரிதமாக செய்யவேண்டியுள்ளது. இந்த அத்தியாவசிய திருத்த வேலைகள் மற்றும் விருத்திப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை செய்யும் பொருட்டு பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|