• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திப் பொருள் கைத்தொழிலை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேறுபட்ட முறைகளுக்கூடாக வாசனைத் திரவியங்களின் இறக்குமதியை இடைநிறுத்தி வைத்திருத்தல்
- இறக்குமதி செய்யப்பட்ட மிளகு மற்றும் பாக்குகளை இந்தியாவுக்கும் அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட சாதிக்காய் / சாதிக்காய் உள்ளீட்டின் வௌிப்புறப் பட்டை மற்றும் புளி என்பவற்றை பாகிஸ்தானுக்கும் மீள் ஏற்றுமதி செய்தல் மற்றும் இலங்கை கறுவாவின் சட்டவிரோத ஏற்றுமதி என்பன காரணமாக உள்நாட்டு வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திப் பொருள் கைத்தொழிலை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன், நுழைவிட பண்டகசாலை வர்த்தகம் மற்றும் வாணிப கேந்திர நிலைய நடவடிக்கைகள் ஊடாக ஏற்றுமதி செய்முறைக்கான இறக்குமதியையும் மிளகு, பாக்கு, சாதிக்காய் / சாதிக்காய் உள்ளீட்டின் வௌிப்புறப் பட்டை, புளி மற்றும் கறுவா என்பவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்தலையும் தற்காலிகமாக இடை நிறுத்துவதற்கும் அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியங்கள் இலங்கை உற்பத்திகளாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையிலிருந்து மீளக் கப்பலில் அனுப்பப்படுவதை தடுப்பதற்குத் தேவையான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும் அத்துடன் அத்தகைய வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியையும் அவற்றை இலங்கையிலிருந்தான உற்பத்திகளாக பதிவு செய்வதையும் தடுப்பதற்குமென அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.