2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய மற்றும் நடுத்தர அளவு அரிசி ஆலையாளர்களுக்கு அவசரமாக நிவாரணம் வழங்குதல் - சிறிய மற்றும் நடுத்தர அளவு அரிசி ஆலையாளர்களினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கள் சார்பில் தவணைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதில் நிலவும் இயலாமை மற்றும் உற்பத்தி பணிகளுக்குத் தேவையான தொழிற்படு மூலதனமில்லாமை போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்த ஆலை உரிமையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு அவர்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களாகவுள்ள ஆலை உரிமையாளர்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு நிதி வழங்குவதற்கும் இந்த நிதியினைப் பயன்படுத்தி அவர்களுடைய தொழிற்படு மூலதனத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய வருவாய் ஊடாக கடன்களை மீள செலுத்தும் வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |