2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் நிலைபேறுடைய துப்பரவேற்பாட்டுத் தீர்வுகள் சம்பந்தமான பிராந்திய மாநாடு - துப்பரவேற்பாடு பற்றிய தெற்காசிய பிராந்திய இணைப்பு மாநாட்டிற்கான பிராந்திய துப்பரவேற்பாட்டு நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்படும் நிலைபேறுடைய துப்பரவேற்பாட்டுத் தீர்வுகள் சம்பந்தமான பிராந்திய மாநாடானது இலங்கையின் அனுசரணையுடன் 2019 பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை கொழும்பில் நடாத்தப்படும். ஆதலால், தெற்காசிய பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள், துப்பரவேற்பாட்டுத் துறை நிபுணர்கள் மற்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடாத்தப்படும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் செய்யப்பட்ட சமர்ப்பிப்புகள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. |