2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இளம் விவசாயிகள் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஊடாக கிராமிய இளைஞர்களையும் யுவதிகளையும் மேம்படுத்தல் - 'யொவுன் புரய - 2019' தேசிய நிகழ்ச்சித்திட்டமானது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மார்ச் மாதம் நடாத்தப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளதுடன், இதற்கு ஒருங்கிணைவாக கிராமிய இளைஞர்களையும் யுவதிகளையும் உற்பத்தி செய்முறையில் பங்குபெறச் செய்விப்பதற்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, தேசிய உற்பத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய திருமணமாகாத இளைஞர் யுவதிகளுக்கு ஒருதடவை வழங்கும் விசேட ஊக்குவிப்பொன்றாக தங்களுடைய வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக 15 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்றையும் கமத்தொழில் நடவடிக்கைகளுக்காக 40 பேர்ச்சர்ஸ் காணியையும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டலை வழங்குவதற்கும் இளைஞர் கமத்தொழில் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக அவர்களை தேசிய பொருளாதாரத்துடன் இணைத்துக் கொள்வதற்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |