2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசங்களில் துப்பரவேற்பாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல் - யாத்திரிகர்களினதும் சுற்றுலா பயணிகளினதும் மகிமைக்குரிய கதிர்காமம் புனித நகரமானது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஒரு நகரமாகும். வார இறுதியில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கு அதிகமான மக்கள் இந்த நகரத்திற்கு வருகை தருவதுடன் திருவிழாக் காலத்தில் நாளொன்றுக்கு இது ஐந்து இலட்சத்தையும் விஞ்சுகின்றது. ஆதலால், இப்பக்தர்களினதும் சுற்றுலாப் பயணிகளினதும் பயன்பாடு கருதி கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசங்களில் 50 மில்லியன் ரூபா செலவில் துப்பரவேற்பாட்டு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |