2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள மின்னறி உபநிலையங்களை தரமுயர்த்துவதற்கான கருத்திட்டம் - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, புதிய அநுராதபுரம் மின்னறி உபநிலையத்தில் 220 kV, 2X50 MVAr மாறி Shunt Reactors மற்றும் மன்னார் மின்னறி உபநிலையத்தில் 220 kV, 50 MVAr மாறி Shunt Reactor பொருத்துவதற்கான ஒப்பந்தத்தை M/s.Siemens Ltd நிறுவனம் மற்றும் DIMO (Pvt.) Ltd நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |