• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தையும் ஆய்வுகூட கட்டடத்தையும் நிர்மாணிப்ப தற்கான ஒப்பந்தம்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தையும் ஆய்வுகூட கட்டடத்தையும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியல் சேவைகள் (தனியார்) கம்பனிக்கு 383.2 மில்லியன் ரூபா தொகைக்கு வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.