2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலுக்கு அனுசரணை வழங்குதல் - பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களினதும் சட்டமா அதிபர்களினதும் பங்குபற்றலுடன் நடாத்தப் படவுள்ள பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலுக்கு அனுசரணை வழங்கும் பொருட்டு இலங்கை சார்பில் பிரேரிப்பொன்று செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |