2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பாரிய தவறுகள் சிலவற்றுக்காக அறவிடப்படும் தண்டத் தொகையை திருத்துதல் - பாரியளவு வீதி விபத்துக்களை விளைவிக்கும் பாரிய தவறுகள் சிலவற்றுக்கான தண்டத் தொகைகளை அதிகரிப்பதற்கு முன்னர் பிரேரிக்கப்பட்ட போதிலும், பல்வேறுபட்ட அக்கறைதாரர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அதிமேதகைய சனாதிபதி அவர்கள், அத்தகைய பிரேரிப்புகளை அமுலாக்குவதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசினை முன்வைக்கும் பொருட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமித்தார். போக்குவரத்து விபத்துக்களை பெருமளவிற்கு ஏற்படுத்தும் பத்து (10) குற்றங்களை இந்தக் குழு இனங்கண்டுள்ளதுடன், அவற்றுக்கான தண்டத் தொகைகளை திருத்துவதற்கான சிபாரிசுகளையும் செய்துள்ளது. அதற்கிணங்க, அது தொடர்பிலான வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டும் அதன் பின்னர் அதனை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |