2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பயணிகள் போக்குவரத்து உரிமப்பத்திரம் வழங்கும் செயல்முறையை மீளாய்வு செய்தலும் புதிய நடைமுறையைத் தயாரித்தலும் - அதிவேகப் பாதையில் பேருந்து தொழிற்பாடு ஆரம்பித்த பின்னர் எழுந்த பிரச்சினைகளை ஆராய்ந்து பேருந்துகளுக்கு பயணப் பாதை உரிமப்பத்திரங்களை வழங்குவதற்காக புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு உரிய அக்கறைதாரர்கள் உள்ளடங்கலாக குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |