2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அற்றோனிதத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல் - போலி ஆவணங்களை எழுதி உறுதிப்படுத்துவதை தடுத்தல், மோசடியான ஆவணங்கள் மீதான கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதை தடுத்தல், மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் அற்றோனிதத்துவத்தை எழுதி உறுதிப்படுத்துதல், இரத்து அல்லது அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் நடவடிக்கைமுறை, தகவல்களின் இரகசிய தன்மையை பாதுகாத்தல் ஆகியவற்றை மிக பயனுள்ள வகையில் செய்யக்கூடிய விதத்தில் அற்றோனிதத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு ஏற்கனவே அமைச்சர வையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினாலும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |