• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டத்திற்காக காணி சுவீகரித்தல்
- அத்துருகிரிய, ஹோமாகம, கடுவலை, மாலம்பே, பன்னிபிட்டிய, மகரகம, தெஹிவலை, கோட்டே மற்றும் பத்தரமுல்லை போன்ற பிரதேசங்களின் எதிர்கால நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை கருத்திட்டமொன்றாக வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டம் இனங்காணப் பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வெலிவிட்ட பிரதேசத்தின் நீர் சேகரிப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம், ஹோகந்தர நிலக்கீழ் நீர்த்தேக்கம் மற்றும் ஜயவடனகம பம்பி நிலையம் போன்ற நிர்மாணிப்புகளுக்குத் தேவையான காணித் துண்டுகளை சுவீகரிக்கும் பொருட்டு நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.