• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல்
- காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமொன்றாக விரித்தி செய்வதன் மூலம் இலங்கையை பிரந்தியத்தின் சமுத்திர கேந்திர நிலையைமொன்றாக மாற்றும் முயற்சிக்கு கிடைக்கும் வலிமை மற்றும் இதனை வர்த்தக துறைமுகமொன்றாக விருத்தி செய்வதன் மூலம் வடக்கு பிரதேசத்தின் வர்த்தக பணிகளின் மேம்பாட்டிற்கு பெற்றுக் கொள்ளக்கூடிய பங்களிப்பின்பால் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறைமுக அபிவிருத்தி கருத்திட்டத்திற்குத் தேவையான காணிகளை சுவீகரித்தல், உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய பயன்பாட்டு வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு ஒருங்கிணைவாக மத மற்றும் சமூக அபிவிருத்தியினை உருவாக்கும் பொருட்டு இந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஐயனார் கோவிலை புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.