2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் உள்ளக வாயு நிலையை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - நகர மற்றும் பகுதி நகர பிரதேசங்களில் இடவசதி வரையறுக்கப்பட்டுள்ளதன் காரணமாக வீடுகள், அரசாங்க கட்டடங்கள் மற்றும் வர்த்தக ஸ்தானங்களில் வசிக்கும் மக்கள் வாயு மாசடைதலுக்கு எந்நேரமும் ஆளாவதனால் கடும் சுகாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துதல் மற்றும் வாயு மண்டல தரத்தினை மேம்படுத்திக் கொள்தல் என்பன பொருட்டு கட்டடங்களிலிருந்து வௌியேறும் வாயுக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது அத்தியாவசிய மானதாகும். ஆதலால் வாயு மாசடைதலினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை குறைப்பதற்காக 2019 - 2021 மூன்று (03) வருட முன்னோடி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |