2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்பு மற்றும் மீள்நிர்மாண பணிகள் சார்பிலான கொடுப்பனவுகளை தீர்த்தல் - வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்பு மற்றும் மீள்நிர்மாண பணிகள் சார்பில் இதுவரை தீர்வு செய்யப்படாத கொடுப்பனவுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் உரிய மாவட்ட செயலாளர்களுக்குத் தேவையான நிதியினை ஏற்பாடு செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|