2019-02-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க துறையில் சம்பளங்களை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக உபகுழுவொன்றை நியமித்தல் - அரசாங்க துறையில் உள்ள சம்பள அளவுத்திட்டங்களை மீளாய்வு செய்து தற்போது எழுந்துள்ள சம்பள முரண்டுகளை இல்லாதொழிப்ப தற்குத் தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு ஏற்கனவே விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்டது. இதற்கமைவாக இந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக செய்யப்பட வேண்டிய சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கையினை அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு கையளித்துள்ளது. இந்த அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராய்ந்து இறுதிப் பிரேரிப்புகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |